ஏக்கம் இந்த அம்மாவாசை வந்தா போயிடும்ன்னு நம்பிக்கையில் இருந்தார் லிங்கம். அம்மாவாசையும் வந்து போயிடுச்சி. ஆனால் தொண்டை குழியில் சின்ன துடிப்புடன் அருணகிரி நாடார் உடலில் இன்னும் உயிர் ஒட்டி கொண்டு தான் இருக்குது. "ஏதோ ஒர் ஏக்கம் அவர் தொண்டையில் தவிக்குது" என்றார் ரத்தினம் நாடார். அது என்னன்னு யாருக்கும் புரியல. சாப்பாடு நின்னு ஒரு வாரமாச்சி, போன வாரமே போயிடும்ன்னு நெனைச்சி வந்த மூத்த மகள் செல்லதாய், மாடு கண்ண பார்க்க ஆளில்லன்னு போயிட்டா. அருணகிரி நாடாருக்கு மூனு பிள்ளைக. மூத்தவ செல்லதாய சுரண்டையில கட்டி குடுத்திருக்கு, அவமகளை தான் லிங்கம் கட்டியிருக்கார். லிங்கம் அருணகிரி நாடாரின் ஒரே மகன். இன்னொருத்தி ரஞ்சிதம். உள்ளுர்லே கட்டி கொடுத்திருந்தார். மனைவி இறந்து பத்து வருஷமாச்சி. அருணகிரி நாடார் அதிக நிலபுலத்துக்கு சொந்தகாரர். இன்னைக்கு அவர் கிட்ட இவ்வளவு நிலம் இருக்குன்னா அதுக்கு காரணம் வக்கில் இராமநாதய்யர் தான். இராமநாதய்யர் தான் வழக்க ஜெயிச்சி கொடுத்து, கை விட்டு போன அம்புட்டு நிலத்தையும் மீட்டு கொடுத்தார். அவருக்கு பூர்விகமான சொத்துகளை வித்து கோவிந்த பேரியில அருணாசல முதலியார்...