கூனன் கிணற்றை சுடலை அக்கா பேரன் வெள்ளையன் வாங்கியிருந்தான். அத ப்ளாட் போட முடிவு செய்திருந்தான். "பேரப்புள்ள அந்த கிணத்துல வேப்ப மரத்தடியில ஒர் கல் நட்டிருக்கும், அத புடுங்கி தூற போட்டுறாத, அந்த கல்ல இங்க கொண்டா" என்றார் சுடலை. "அந்த கல்லு உமக்கெதுக்கு" என கேட்டான் வெள்ளையன். "தாத்தாவுக்கு வேணும்யா" என கேட்டார் சுடலை. ____________ அந்த கல்லுக்கும் சுடலைக்கும் ஐம்பது வருட பந்தம். நினைவு பெட்டகத்தில் பொத்தி வைத்திருந்த நினைவலயில் மூழ்கினார் சுடலை. ---------- பக்கத்துல எங்கயோ கோடாங்கி அடிக்கும் சத்தம் கேட்டது. "இந்த ஐப்பசி, கார்த்திகை வந்துட்டா போதும் நம்மள ஒரங்க விடமாட்டாங்க, நாட்டுல இருக்க பேயெல்லாம் இந்த நாலு தெருவுக்கு மொத்தமா வந்துரும்" என்றான் சுடலை. சுடலை பேசிக்கொண்டே எலி பொறிக்கு டயரை அருத்துக்கொண்டிருந்தான். இந்த சுற்று வட்டாரத்தில் வயக்காட்டுல எலி புடிக்கதுல சுடலைய மிஞ்ச ஆளே இல்லை. கார்த்திகை மார்கழியில நெல்லுல கருது வர ஆரம்பிக்கும், கூடவே எலியும் வந்திடும். சுடலைக்கு அப்ப மவுசு தான் கொஞ்சம் வருமாணமும் கிடைக்கும். மற்ற காலத்தில துணி தொவைக்...